கணவன் கண் எதிரே மனைவி பலி

வளசரவாக்கம்: சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (52). இவர் கோயம்பேடு பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி காஞ்சனா (45). இவர்கள் நேற்று முன்தினம் கோயம்பேட்டில் இருந்து திருவேற்காடுக்கு பைக்கில் புறப்பட்டனர். கோயம்பேடு- பூந்தமல்லி மெயின்ரோட்டில் சென்றபோது, திருத்தணியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி வந்த அரசு பேருந்து, அவர்களது பைக் மீது பயங்கரமாக மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்டு, பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கிய காஞ்சனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த ராமலிங்கம், மனைவி சடலத்தை பார்த்து கதறி அழுதார். கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, காஞ்சனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார், அரசு பேருந்து ஓட்டுனர் பழனியை (47) கைது செய்தனர்.

The post கணவன் கண் எதிரே மனைவி பலி appeared first on Dinakaran.

Related Stories: