பழங்குடியின மக்களின் முன்னேற்றமே சமூக நீதியாக அமையும் என்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதால், பழங்குடியின பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், தெருவிளக்கு அமைத்தல் மற்றும் விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களும் பழங்குடியின மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் பழங்குடியினரின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய அலுவல் சாரா உறுப்பினர்களில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 15 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இம்மன்றம் விரைவில் மறுசீரமைக்கப்பட்டு 2021- ஆம் ஆண்டு இவ்வரசால் அமைக்கப்பட்ட தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையம் செயல்படுவதை போன்று சிறப்பாக செயல்படும்” என்று தெரிவித்துள்ளார்.
The post தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் விரைவில் மறுசீரமைக்கப்படும்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் appeared first on Dinakaran.