மதுரை மண்டல முன்னாள் பாஸ்போர்ட் உதவி அதிகாரியின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை

மதுரை: மதுரை மண்டல முன்னாள் பாஸ்போர்ட் உதவி அதிகாரியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிபிஐ கோர்ட் விதித்த தண்டனையை ரத்து செய்யக் கோரி மனு அளிக்கப்பட்டது. மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது; ஆவண, ஆதாரங்கள் உள்ளன என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிபிஐ தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, சிபிஐ கோர்ட்டின் உத்தரவில் தலையிட வேண்டியதில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

The post மதுரை மண்டல முன்னாள் பாஸ்போர்ட் உதவி அதிகாரியின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Related Stories: