ரூ.1,000 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டது 33 ஆண்டு கால சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: ரூ.1,000 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டது சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னையில் முக்கிய பகுதியில் அரசுக்கு சொந்தமான 115 கிரவுண்ட் நிலம் மீட்கப்பட்டுள்ளது. 33 ஆண்டு சட்டப்போராட்டத்தில் ரூ.1000 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான நிலத்தை தனியார் இடமிருந்து மீட்க தோட்டக்கலைத்துறை சார்பில் தொடர் சட்டப்போராட்டம் நடத்தியுள்ளது. அரசு நிலத்தை தனியாரிடம் இருந்து மீட்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் தொடர் சட்ட முயற்சிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post ரூ.1,000 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டது 33 ஆண்டு கால சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: