இப்பணிகளை ஆய்வு செய்த நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் தஞ்சையில் இருந்து கடலூர் வரை ரூ.90 கோடி மதிப்பில் பாசன ஆறுகள் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால் நடப்பாண்டு கடைமடை வரை தண்ணீர் விரைவாக சென்றடையும் என்றார். வரும் 8ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதாகவும் அதற்குள் கல்லணையில் மதகுகள் சீரமைக்கும் பணிகள் நிறைவடையும் என்றும் நீர்வளத்துறை பொறியாளர் தெரிவித்தார். இதனிடையே வரும் 9ம் தேதி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யவுள்ளார்.
The post கல்லணையில் ரூ.90 கோடியில் பாசன கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் தீவிரம்..!! appeared first on Dinakaran.