இப்பகுதியில் உள்ள இரு காடுகளுக்கும் யானை இடம்பெயரும் போது பல குடியிருப்புகள் மத்தியில் பொதுமக்களுக்கு எந்த இடையூறும், அச்சுறுத்தல் செய்ததில்லை. ஆனால் தற்போது வறட்சியின் காரணமாக உணவு தேடி விவசாய நிலங்களுக்குள் கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் அதிக அளவில் புகுந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்றைய தினம் பாகுபலி யானையானது விவசாய நிலத்திற்குள் புகுந்த தகவல் அறிந்து சென்ற வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
யானையானது மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் நின்று கொண்டிருந்த காரணத்தினால் யானையின் மீது பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. குறிப்பாக பட்டாசு யானையின் மீது படாதவாறு வனத்துறையினர் வீசி யானையை விரட்டி அடித்தனர். இன்று அதிகாலையில் நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து குடியிருப்புகள் வழியாக கல்லாறு வனப்பகுதிக்கு சென்றது. இதையும் வனத்துறையினர் கண்காணித்து கல்லாறு வனப்பகுதிக்கு சென்று விட்டதா என்றும் கண்காணித்து வருகின்றனர்.
The post மேட்டுப்பாளையத்தில் பாகுபலி யானை தோட்டத்திற்குள் புகுந்தது பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை..!! appeared first on Dinakaran.