சேலம் அருகே கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..!!

சேலம்: உத்தமசோழபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் கல்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த தொழிலாளி வெங்கடாசலம், மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு பூங்கொடி என்ற மகள் உள்ளார். இவர்கள் திருவிழாவுக்காக புத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது உத்தமசோழபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வெங்கடாஜலம், அவரது மனைவி மாரியம்மாள், மகள் பூங்கொடி ஆகிய மூவரும் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சேலம் அருகே கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: