கோயிலில் புகைப்படம் எடுக்க தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் புகைப்படம் எடுக்கவோ, அதை சமூக வலைதளங்களில் பதிவிடவோ தடை இல்லை என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் 100 ஆண்டுகள் பழமையான புராதன சின்னங்கள் எனக்கூறி படம் எடுத்து பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்கின்றனர். நாம் 2,000 ஆண்டுகள் பழமையான புராதன சின்னங்களை வைத்துக் கொண்டு எதுவும் செய்யாமல் இருக்கின்றோம் என மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோக்களை நீக்கக் கோரிய வழக்கில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post கோயிலில் புகைப்படம் எடுக்க தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: