விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை வெள்ளி கிழமை நடத்த வேண்டும்

 

திண்டுக்கல், ஜூன் 6: கொடைக்கானல் தாலுகா, தாண்டிக்குடியை சேர்ந்த கணேஷ் பாபு நேற்று கலெக்டர் பூங்கொடியிடம் அளித்த மனுவில், ‘திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நலனுக்காக ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை ஆர்டிஓ அலுவலகங்களில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கடந்த மாத முதல் அதனை திங்கள் கிழமையாக மாற்றி நடத்துகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு அதிகாரிகள் செல்வதால், ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெறும் விவசாய குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை. எனவே கலெக்டர் முன்புபோல் மாதம் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயக் குறைதீர் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.

The post விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை வெள்ளி கிழமை நடத்த வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: