அரசு பஸ் மீது பைக் மோதி வாலிபர் பலி

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே அரசு பஸ் மீது பைக் மோதியதில் வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சங்கர் (37). இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு வேலை விஷயமாக வெளியூருக்கு சென்று விட்டு பைக்கில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அச்சிறுப்பாக்கம் காந்தி நகர் அருகே வந்தார்.

அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக், சென்டர் மீடியனில் மோதி, எதிர் திசையில், அசுர வேகத்தில் வந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், சங்கர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த அச்சிறுப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post அரசு பஸ் மீது பைக் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: