உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி: 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

மாமல்லபுரம்: 1974ம் ஆண்டு முதல் ஒவ்வோரு ஆண்டும் ஜூன் மாதம் 5ம் தேதி சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் இல்லா விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பேரணியில், செயல் அலுவலர் கணேஷ் தலைமை தாங்கினார். துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மேற்பார்வையாளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் கலந்து கொண்டு கடற்கரை கோயில் அருகே பேரணியை தொடங்கிவைத்தார். அப்போது, கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு கோஷம் எழுப்பியவாறு சென்றனர். தொடர்ந்து, தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஒன்றிணைந்து மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினர். இதில், 7வது வார்டு திமுக கவுன்சிலர் லதா குப்புசாமி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

The post உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி: 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: