வட சென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள முதலாவது நிலையில், 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், 2வது நிலையில் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதலாவது நிலையின் 2 மற்றும் 3வது அலகுகளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக, 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post வட சென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: