டாஸ்மாக் அதிகாரிகள் தகவல் 500 கடை மூடுவது தொடர்பாக ஒரு வாரத்தில் அறிவிப்பு வரும்

சென்னை: தமிழ்நாட்டில் 500 மதுபான கடைகள் மூடுவது தொடர்பான அறிவிப்புகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் மதுபான கடைகள் 5,329 செயல்பட்டு வருகின்றன. இதில் 500 கடைகள் மூடப்படும் என நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பினை வெளியிட்டார். அதன்படி, மூடப்படும் மதுபான கடைகள் தொடர்பான பட்டியல் தயார் செய்யப்பட்டு இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதற்கான அறிவிப்புகள் ஒரு வாரத்தில் வெளியாகும் என டாஸ்மாக் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மதுபான கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post டாஸ்மாக் அதிகாரிகள் தகவல் 500 கடை மூடுவது தொடர்பாக ஒரு வாரத்தில் அறிவிப்பு வரும் appeared first on Dinakaran.

Related Stories: