பட்டாசு ஆலை விபத்தில் பலி 5 ஆக உயர்வு

சேலம்: சேலம் இரும்பாலை அடுத்த எஸ்.கொல்லப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (41) நாட்டு பட்டாசு தயாரிக்கும் ஆலை நடத்தி வந்தார். கடந்த 1ம் தேதி மாலை இவரது பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் சதீஷ்குமார், நடேசன்(50), பானுமதி (55) ஆகியோர் இறந்தனர். மேலும், மஜ்ரா கொல்லப்பட்டியை சேர்ந்த மோகனா(38), வசந்தா(45), மகேஷ்வரி(34), மணிமேகலை (36), பிரபாகரன்(31), பிருந்தா(28) ஆகிய 6 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் பிரபாகரன், மோகனா ஆகியோர் நேற்று இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. மேலும் 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post பட்டாசு ஆலை விபத்தில் பலி 5 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: