இந்தவகையில், வட மாநிலங்களில் இருந்து சேலம், ஈரோடு, கோவை வழியே கேரளா மாநிலம் செல்லும் 3 ரயில்கள், ஒடிசாவில் விபத்து நடந்த பகுதியில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. இதனால், அந்த ரயில்கள் தமிழகத்திற்கு வந்து சேர தாமதமாகும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்படி, பாட்னா-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (22644), மாற்றுப்பாதையாக அட்ரா-சாண்டில்-ரூர்கேலா-விசாகப்பட்டணம் வழியே வருகிறது.
இதேபோல், சில்சார்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (12508) கோராக்பூர்-டாடா-ரூர்கேலா-சாம்பல்பூர்-சிங்கப்பூர் ரோடு வழியே மாற்றுப்பாதையில் வருகிறது. திப்ரூக்கர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் (22504) கோராக்பூர்-டாடா-ரூர்கேலா-சாம்பல்பூர் வழியே மாற்றுப்பாதையில் வருகிறது. சேலம் வழியே செல்லும் திருவனந்தபுரம்-சாலிமர் எக்ஸ்பிரஸ் (22641), இன்று (3ம் தேதி) ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post ஒடிசா ரயில் விபத்து எதிரொலி; சேலம் வழியே கேரளா செல்லும் 3 ரயில் மாற்றுப்பாதையில் வருகிறது: திருவனந்தபுரம்-சாலிமர் ரயில் ரத்து appeared first on Dinakaran.