மேலும், கைது செய்யப்பட்ட 11 பேரிடம் என்ஐஏ போலீசார் தீவிர விசாரணை நடத்தி, பல்வேறு தடயங்கள் மற்றும் ஆவணங்களை சேகரித்துள்ளனர். இந்நிலையில், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட உமர் பாரூக்,
பெரோஸ்கான், முகமது தவுபீக், ஷேக் இதாயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 5 பேர் மீது நேற்று பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்பு என்ஐஏ போலீசார் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே, இவ்வழக்கில் இறந்துபோன ஜமேஷா முபீனை சேர்ந்த 7 பேர்மீது என்ஐஏ போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். தற்போது இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மொத்தம் 11 பேருக்கும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post பூந்தமல்லி நீதிமன்றத்தில் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.