இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. இதனால் பயணிகள் கூச்சலிட்டனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கண்டக்டர் திருப்பதி, உடனடியாக டிரைவர் சீட்டில் அமர்ந்து பஸ்சை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் டிரைவர் முகேஷ்ராஜாவை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த முகேஷ்ராஜாவிற்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். இது குறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post மாரடைப்பால் பஸ் டிரைவர் உயிரிழப்பு 62 பயணிகளின் உயிரை காப்பாற்றிய கண்டக்டர் appeared first on Dinakaran.