சென்னை எழும்பூரில் உள்ள பிரெசிடென்சி கிளப்பில் மின்கசிவால் தீ விபத்து

சென்னை: எழும்பூரில் உள்ள பிரெசிடென்சி கிளப்பில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. எழும்பூரில் உள்ள பிரெசிடென்சி கிளப் என்ற விடுதியில் இன்று காலை 10.30 மணி அளவில் மேலாளர் வழக்கம் போல் பணிக்கு வந்து தன்னுடைய அறையில் உள்ள ஏசியை ஆன் செய்துள்ளார். பின்னர் கீழே சென்றுள்ளார். இந்நிலையில் மின்கசிவு அந்த அறையில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஏசியில் தீ பற்றி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், நெருப்பை கட்டுப்படுத்தினர். தற்போது தீ அணைக்கப்பட்டுள்ள நிலையில், மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்தானது ஏற்பட்டதாக எழும்பூர் போலீசர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

The post சென்னை எழும்பூரில் உள்ள பிரெசிடென்சி கிளப்பில் மின்கசிவால் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: