வக்பு வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு பணிக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வக்பு வாரியத்தில், அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட வாரியாக ஓராண்டு பணியாற்றிட கீழ்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சென்னையில் துணை ஆட்சியர் பணியிடம்(மாத ஊதியம் ரூ.40,000), சென்னை, பூந்தமல்லி, வேலூர், கடலூர், திருச்சி, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், கோயமுத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி சரகங்களில் வட்டாட்சியர்(மாத ஊதியம் ரூ.40,000), துணை வட்டாட்சியர், கண்காணிப்பாளர்(மாத ஊதியம் ரூ.30,000 + ரூ.5,000 பயணப்படி), வருவாய் ஆய்வாளர்(மாத ஊதியம் ரூ.25,000) பணியிடங்கள், மற்றும் அனைத்து மாவட்டங்களுக்கும் கிராம நிர்வாக அலுவலர் (மாத ஊதியம் ரூ.20,000). தங்களது விண்ணப்பத்தினை வரும் ஜூன் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் tnwb@tn.gov.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post வக்பு வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு பணிக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: