ஓபிஎஸ் வலியுறுத்தல் போக்குவரத்து துறையில் தனியார் மூலம் ஆட்களை நியமிக்க கூடாது

சென்னை: போக்குவரத்து துறையில் தனியார் மூலம் ஆட்களை நியமிக்க கூடாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர், பணிமனை பணியாளர்களை முறையாக, நிரந்தர அடிப்படையில் பணியமர்த்தாமல், தனியார் ஏஜென்சி மூலம் ஒப்பந்த அடிப்படையில் முதற்கட்டமாக 500க்கும் மேற்பட்ட பணியாளர்களை அரசு நியமித்து இருக்கிறது. இதற்கு தொழிலாளர்களிடையே கடும் எதிர்ப்பு நிலவுகிறது. போக்குவரத்துக் கழகங்களில் வெளிமுகமை மூலம் ஆட்கள் அமர்த்தப்படுவதை கைவிட்டு, பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாவதை இனி வருங்காலங்களில் தடுத்து நிறுத்தவும், காலிப் பணியிடங்களை முறையாக நிரந்தர அடிப்படையில் நிரப்பிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

The post ஓபிஎஸ் வலியுறுத்தல் போக்குவரத்து துறையில் தனியார் மூலம் ஆட்களை நியமிக்க கூடாது appeared first on Dinakaran.

Related Stories: