பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை மாஜி சிறப்பு டிஜிபி கோர்ட்டில் ஆஜர்

விழுப்புரம்: தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்.பி. ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் குறுக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், அரசு தரப்பில் 68 சாட்சிகளிடமும் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. நேற்று நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு டிஜிபி நேரில் ஆஜரானார். எஸ்.பி ஆஜராகவில்லை. அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹேமராஜன் வராதது குறித்து தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. தொடர்ந்து, சிறப்பு டிஜிபி தரப்பு வாதம் நடைபெற்றது. இந்த வாதம் முடிவடையாத நிலையில் வரும் 5ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை மாஜி சிறப்பு டிஜிபி கோர்ட்டில் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: