அகமதாபாத்தில் இருந்து ஐபிஎல் கோப்பை சென்னை வருகை

சென்னை: ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கைப்பற்றிய, ஐந்தாவது ஐபிஎல் கோப்பை, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. பிஎல் 2023 போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. இதன் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. இதன் மூலம் 5வது முறையாக சிஎஸ்கே அணி, சாம்பியன் பட்டம் வென்றது. அதனைத்தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் கைப்பற்றிய ஐந்தாவது ஐபிஎல் கோப்பையை, அகமதாபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டு வந்தனர்.

சூட்கேஸ் மூலம் கொண்டுவரப்பட்ட ஐபிஎல் கோப்பையை, காரில் வைத்து சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சென்னை தியாகராய நகரில் உள்ள வெங்கடேஸ்வரா கோயிலில் கோப்பையை வைத்து பூஜை செய்யப்பட்டது. மேலும் கோப்பையுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் பிளம்மிங் உள்ளிட்டோர் சென்னை வந்தனர். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஓ விசுவநாதன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது ஐபிஎல் கோப்பையை வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, தற்போது எந்த வெற்றி கொண்டாட்டத்திற்கும் திட்டமிடப்படவில்லை.

இப்போது தான் சென்னை வந்து உள்ளோம். தோனி அடுத்த சீசனில் விளையாடுவார், என அவரே தெரிவித்துள்ளார். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வீரர்கள் தற்போது யாரும் சென்னை வரவில்லை. விரைவில் வெற்றி கொண்டாட்டங்கள் குறித்து தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அகமதாபாத்தில் இருந்து ஐபிஎல் கோப்பை சென்னை வருகை appeared first on Dinakaran.

Related Stories: