அனுமதிக்கத்தக்க உயர்த்தப்பட்ட அகவிலைப்படியினை கணக்கிட அடிப்படை ஊதியத்துடன் தனிப்பட்ட ஊதியத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். திருத்தப்பட்ட அகவிலைப்படியை கணக்கிடுகையில், ஒரு ரூபாய்க்கு குறைவாக வரக்கூடிய தொகை, அதாவது 50 காசும் அதற்கு மேலும் இருக்குமாயின், அதனை ஒரு ரூபாயாக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவே 50 காசுக்கு குறைவாக இருந்தால், அதனை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அனுமதிக்கப்பட்ட திருத்தப்பட்ட அகவிலைப்படி தற்போது அகவிலைப்படி பெறும் முழுநேர பணியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் மற்றும் திருத்தப்பட்ட ஊதிய விகிதம் ரூ.4,100 முதல் ரூ.12,500 வரை பெறும் பணியாளர்களுக்கு அனுமதிக்கத்தக்கதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post புதிய அகவிலைப்படி ஊதியம் ஜூனில் வழங்க நடவடிக்கை: மின் துறை செயலாளர் தகவல் appeared first on Dinakaran.