இதுகுறித்து சிஐடியு தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: போக்குவரத்து துறையை தனியார்மயமாக்கக் கூடாது. ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே ஏப்ரலில் ஸ்டிரைக் நோட்டீஸ் கொடுத்துள்ளோம். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஜூன் 6ம் தேதிக்கு பிறகு ஸ்டிரைக் நடத்துவோம் என்று தெரிவித்தோம்.
இதுசம்பந்தமாக ஏற்கனவே ஒருமுறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. மீண்டும் நாளை 2வது கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர்கள் நலத்துறை இணை கமிஷனர் முன்னிலையில் போக்குவரத்து கழக நிர்வாகமும் நாங்களும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறோம். மற்ற தொழிற்சங்கத்தினர் வந்தாலும் ஆட்சேபணை இல்லை. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு நாளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரையும் சந்திக்க உள்ளோம்.இவ்வாறு கூறினர்.
The post ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமன விவகாரம்; தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் நாளை பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.