சூலூர் மயானத்தில் ஆண் சடலம் மீது அமர்ந்து பூஜை செய்த அகோரி: வீடியோ வைரல்

சூலூர்: சூலூர் மயானத்தில் எரியூட்ட வந்த ஆண் சடலத்தின் மீது ஏறி அமர்ந்து அகோரி பூஜை செய்த வீடியோ வைரலாகி வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் இறந்த சுமார் 40 வயது ஆண் சடலம் ஒன்று சூலூர் எரிவாயு மயானத்தில் இறுதி சடங்குக்காக நேற்று முன்தினம் முன்பதிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் சடலம் சூலூர் மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. சடலத்துடன் இறந்தவரின் உறவினர்களுடன் 8 அகோரிகள் வந்தனர். அவர்கள் சடலத்தை வேனில் இருந்து இறக்கி எடுத்துச் சென்றபோது உடுக்கை வாத்தியங்களுடன், மந்திரங்கள் ஓதியபடி எடுத்துச் சென்றனர்.

இறந்தவரின் உடல் எரியூட்டப்படுவதற்கு முன் அகோரிகளில் ஒருவர் சடலத்தின் மீது ஏறி அமர்ந்து சுமார் 5 நிமிடம் மந்திரங்களை ஓதினார். அதன்பின், இறந்தவரின் உடல் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. இதுதொடர்பான வீடியோ வைரலானது. இதுகுறித்து மின்மயான பொறுப்பாளர் சுரேஷிடம் கேட்டபோது, இறந்தவரின் உறவினர்கள் சம்மதத்துடனே இதுபோன்ற சடங்குகள் நடந்தன. இதுகுறித்து எதுவும் கூறுவதற்கு இல்லை என்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post சூலூர் மயானத்தில் ஆண் சடலம் மீது அமர்ந்து பூஜை செய்த அகோரி: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: