கோயில் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ததில், கோயில் பூட்டை உடைத்து 7 சிலைகளையும் திருடிச் சென்றது பெரியசோரகையை சேர்ந்த சாமியார் சக்திவேல் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், சக்திவேலை அதிரடியாக கைது செய்தனர்.
அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமாள் சிலை உள்ளிட்ட 7 சிலைகளையும் மீட்டனர். விசாரணையில் அவர், அந்த பகுதியில் உள்ள கோயிலில் பூசாரியாகவும், காவி வேஷ்டி கட்டிக்கொண்டு சாமியாராக குறி சொல்வதுமாக இருந்துள்ளார். தனது வீட்டில் பூஜை நடத்தி குறி சொல்ல, வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்த 7 சிலைகளையும் திருடி வந்தது தெரிந்தது. இதையடுத்து கைதான சாமியார் சக்திவேலை, ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
The post பெருமாள் கோயிலில் 7 சிலைகளை திருடிய சாமியார் அதிரடி கைது appeared first on Dinakaran.