தமிழ்நாட்டில் விரைவில் உலக தமிழ் செம்மொழி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்த திட்டம் இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூரில் உள்ள தமிழ் நாளிதழுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:

‘நீண்ட தூரம் ஓடி­னால்­ தான் அதிக உய­ரம் தாண்ட முடி­யும்’ என்று தமிழ்நாடு முன்­னாள் முதல்­வரும் காலஞ்­சென்ற என் தந்­தை யா­ரு­மான கலை­ஞர் கரு­ணா­நிதி சொல்­வார். அந்த வகை­யில், வரும் 2030ம் ஆண்­டிற்­குள் தமிழ்­நாட்­டின் பொரு­ளி­யலை ஒரு டிரில்­லி­யன் அமெ­ரிக்க டால­ராக உயர்த்த வேண்­டும் என்று இலக்கு வகுத்து செயல்பட்டு வருகிறேன். இருப்பினும், அந்த இலக்கு எட்டிச் சாதிப்பது என்பது அவ்­வ­ளவு எளி­தன்று எனத் தெரிந்தாலும் அது நானாகவே வகுத்­துக்­கொண்ட இலக்கு. அதன்படி, அந்த இலக்கை அடை­யத் திட்­ட­மிட்­டுச் செயல்­பட்டு வரு­கிறேன். அதற்­கான வரை­வுத்­திட்­டத்­தைத் தயா­ரிக்க ‘போஸ்­டன் கன்சல்ட்­டிங் குரூப்’ எனும் ஆலோ­சனை நிறு­வ­னத்­தைப் பணி­யி­ல் அமர்த்தி உள்ளேன். மேலும், ஒரு டிரில்­லி­யன் டாலர் பொரு­ளி­யல் என்ற இலக்கை எட்ட தமிழ்­நாட்­டிற்கு மேலும்ரூ.2,300,000 கோடி முத­லீடு தேவை. அதன்­மூ­லம் 4,600,000 பேருக்கு வேலை­வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­தித் தர­வேண்­டும். அந்த இலக்கை எங்களால் அடைய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

அதேபோல, தமிழ் ஆட்­சி­மொ­ழி­யாக இருக்­கும் நாடு, தமி­ழர்­கள் அதி­கம் வாழும் நாடு என்­ப­தால் சிங்­கப்­பூர்­மீது அள­வில்­லாப் பற்று கொண்­டுள்­ளேன். சிங்கப்பூர் என்னுடைய நெஞ்­சுக்கு நெருக்­க­மான நாடா­கத் திகழ்­கிறது. தமிழ்­நாட்­டில் கிட்­டத்­தட்ட 30 சிங்கப்பூர் நிறு­வ­னங்­கள் செயல்­பட்டு வரு­கின்­றன. குறிப்பாக, அசெண்­டாஸ் நிறு­வ­னம், தர­ம­ணி­யில் ஒரு மிகப் பெரிய தொழில்­நுட்­பப் பூங்­காவை நிறு­வி­யுள்­ளது. தெமா­செக், டிபி­எஸ் வங்கி, மேப்­பிள்ட்ரீ, சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் போன்ற பல நிறு­வ­னங்­கள் தமிழ்­நாட்­டில் தொழில் செய்து வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும்ரூ.4,800 கோடி முத­லீட்­டில் 4 சிங்­கப்­பூர் நிறு­வனங்­கள் தமிழ்­நாட்டு அர­சு­டன் ஒப்­பந்­தம் செய்­துள்­ளன. இதன்­மூ­லம் 6,200 பேருக்கு வேலை­வாய்ப்பு உரு­வாக்­கப்­பட்டுள்­ளது. இன்­னும் பல திட்­டங்­க­ளுக்கு நிறுவனங்களுடன் பேச்­சு­வார்த்­தை­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. அந்தவகையில், “மின்­ன­ணு­வி­யல், வாகன உதிரி பாகங்கள், தடையற்ற வணிக, பொரு­ளி­யல் மண்­ட­லங்­கள், தக­வல் தொழில்­நுட்­பம், உண­வுப் பதப்­ப­டுத்­து­தல், மருந்து, ஆடை போன்ற பல்­வேறு துறை­களில் அந்­நி­று­வ­னங்­கள் முத­லீடு செய்ய முன்­வந்­துள்­ளன. மேலும், மின்­வா­க­னங்­க­ளுக்­கான மின்­னூட்ட நிலை­யங்­கள் போன்ற புதிய துறை­க­ளி­லும் முத­லீடு செய்­யப்­பட்­டுள்­ளது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாது உலகெங்கும் பரவியுள்ள தமிழ்ச்சமூகத்தின் தலைவராகவும் விளங்கினார். அதே வழியை தான் நானும் பின்பற்றுகிறேன். உலகில் எங்கு தமிழர்களுக்கு எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்.

அந்தவகையில் தான், அண்மையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, தமிழ்நாடு கைகொடுத்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்நாட்டிற்கு அரிசி, பால், மருந்துகள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்தோம். மேலும், தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கு சிறப்பான வாழ்வியல் சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்குடன்ரூ.500 கோடி செலவில் 7400 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெருக்க திறன் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. அதேபோல, உக்ரைன் நாட்டில் போர் நடந்ததன் காரணமாக, அங்கு மருத்துவம் படிக்க சென்ற மாணவர்களை பத்திரமாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து அவர்களை வீடுவரை கொண்டு சேர்த்தோம். உலகம் முழுவதும் பரவி வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு தாய்வீடு என்பது தமிழ்நாடு தான். உலகம் முழுக்க வாழும் தமிழர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் அமைப்பாக அந்த வாரியம் அமைய வேண்டும் என திட்டமிட்டு செயல்படுத்துவோம். அதன்படி, தாய்த்­த­மிழ்­நாட்­டை­யும் அய­ல­கத் தமி­ழர்­க­ளை­யும் இணைக்­கும் ஒரு பால­மாக, அவ்­வா­ரி­யம் செயல்­படும். தமிழ்­மொழி, தமி­ழிசை, நாட்­டி­யம், பண்­பாடு ஆகி­ய­வற்றை அடுத்த தலை­முறைத் தமி­ழர்­க­ளுக்­குக் கொண்டு செல்­லும் பணி­யை­யும் அந்த வாரியம் செய்யும்.

பதவியேற்று இரண்டு ஆண்டுகளில் திமுக அரசு என்னென்ன சவால்களை கடந்து வந்துள்ளது? இனி எத்தகைய சவால்களை எதிர்நோக்கி இருக்கிறது? புதிய அரசு பொறுப்பேற்று கடந்த இரண்டு ஆண்டுகளில் பல சவால்களை கடந்து வந்துள்ளோம். பூக்கள் நிறைந்த அழகிய சாலையில் நான் பயணம் செய்யவில்லை. முற்றிலும் பாழ்படுத்தப்பட்ட சாலையில் குண்டும் – குழியும், மேடும் – பள்ளமும், கல்லும் – முள்ளும் ஆணியும் கொண்ட சாலையில் பயணம் செய்வதை போலத்தான் முதல் சில மாதங்கள் இருந்தன. தமிழ்நாடு அரசுக்குரூ.500,000 கோடி கடன் என்றதொரு கடினமான சூழலில் தான் முதல்வராக நான் பதவியேற்றேன். மேலும், அந்த நேரத்தில் கொரோனா2­வது அலை பெரும் அச்­சு­றுத்­தலை உரு­வாக்­கி­யி­ருக்­கி­ இருந்­தது. அப்பேரி­ட­ரி­லி­ருந்து மக்­க­ளைக் காப்­பதே முதல் கட­மை­யாக இருந்­தது.மேலும், அத­ னைச் சரி­யாக நிறை­வேற்றி, அதன் பிறகு தமிழ்­நாட்டை முன்­னேற்­றப் பாதைக்கு அழைத்­துச் செல்­லும் சவா­லான பணியை மேற்­கொள்­ளத் தொடங்­கி­னோம். நிதி நிலைமை ஓர­ளவு சரிசெய்­யப்­பட்­டுள்­ளது. வரு­வாய்ப் பற்­றாக்­கு­றை­யைக் குறைத்திருக்கிறோம். உற்­பத்தி பெருகி உள்­ளது. புதிய நிறு­வ­னங்­கள் வந்­துள்­ளன. வேலை வாய்ப்­பு­கள் கிடைத்­துள்­ளன. இருப்­பி­னும், நாங்­கள் போக வேண்­டிய தூரம் இன்­ன­மும் இருக்­கிறது.என்­னைப் பொறுத்­த­வரை, இவற்­றையெல்லாம் சவால்­க­ளாக நினைக்­க­வில்லை. பொது­வாழ்க்­கை­யில், அரசு நிர்­வா­கத்­தில் இவற்றை எதிர்­கொண்­டு­தான் ஆக வேண்­டும். எதிர்­ம­றை­யா­கப் பேசி கார­ணங்­க­ளைத் தேடு­வதைவிட, நேர்­ம­றை­யா­கச் சிந்­தித்து சாதனைகளை செய்வதையே நான் விரும்புகிறேன். அப்படி தான் செயல்பட்டு வருகிறேன்.

தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் வருகை நன்மையா? தீமையா? ‘தமிழ்­நாட்­டில் இப்­போது வடஇந்­தியர்கள் பெருகி­விட்டனர். சிறு­ந­க­ரங்­க­ளிலும்கூட அவர்­களை அதி­கம் காண முடி­கிறது. அவர்­கள் இல்­லை­யேல் தொழிற்­சா­லை­கள் முடங்­கிப் போகும்’ என்ற நிலை இருப்­ப­தாக தமி­ழக வட்­டா­ரங்­கள் கூறு­கின்­றன. இருப்பினும், தமிழ்­நாடு வளர்ந்த, வள­மிக்க மாநி­ல­மாக இருப்­ப­தால் வட­மா­நி­லத் தொழி­லா­ளர்­கள் வேலை­க்கா­கத் தமி­ழ­கத்­திற்கு வரு­கி­றார்­கள், அவ்­வ­ள­வு­தான். இது தமிழ்­நாட்­டுக்கு நன்­மையே தவிர தீமை­யன்று. அதற்­காக மற்­ற­வர்­களது வேலைவாய்ப்பை அவர்­கள் பறித்துக்கொள்கிறார்கள் என்று கூற முடியாது. எங்­க­ளைப் பொறுத்­த­வரை, தமி­ழர் நல­னும் தமிழ்­நாட்­டின் மேன்­மை­யுமே முக்­கி­யம். அதில் நாங்­கள் எப்­போ­தும் உறு­தி­யாக இருப்­போம். தமிழ் கட்­டா­யம், வேலை­வாய்ப்­பில் தமிழர்­க­ளுக்கு முன்­னு­ரிமை போன்ற திட்­டங்­களைச் செயல்­ப­டுத்தி வரு­கிறோம்.

தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு குறித்து சிங்கப்பூர் தமிழர்கள் கவலை தெரிவித்துள்ளனரே? மாநில அர­சின் உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்­சிக்கு ஏற்­ற­வாறு ஆண்­டு­தோ­றும் சொத்­து­வரி விகி­தத்தை மாற்றி அமைத்­திட வேண்­டும் என்று ஒன்­றிய அர­சால் அமைக்­கப்­பட்ட 15வது நிதி ஆணை­யம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது. அதன்படி, தமிழ்­நாட்­டில் சொத்து வரி­யா­னது, இந்­தி­யா­வின் மற்ற பெரு­ந­க­ரங்­க­ளோடு ஒப்­பி­டும்­போது, மிக­வும் குறை­வா­கவே வசூ­லிக்­கப்­படு­கிறது. மும்பை, பெங்­க­ளூரு, கொல்­கத்தா, புனே ஆகிய நக­ரங்­களைக் காட்­டி­லும் சென்­னை­யில் சொத்­து வரி குறை­வு­ தான். சொத்­து­வரி உயர்வு என்­பது 83 விழுக்­காடு வீடு­க­ளுக்கு மிகக் குறை­வான அள­வில் ­தான் உயர்த்தப்பட்டுள்ளது.
அதிமுக பிளவுப்பட்டு கிடப்பது திமுகவிற்கு சாதகமா? அதி­முக இப்­போது நான்கு அணி­க­ளா­கப் பிரிந்து கிடக்­கிறது. அது­பற்றி எங்­க­ளுக்­குக் கவ­லை­யில்லை. அவர்­க­ளது பல­வீ­னத்தை வைத்து நாங்­கள் அர­சி­யல் செய்­வ­தில்லை. எங்­க­ளது கொள்­கை­களையும் தொண்­டர் பலத்­தை­யும் நம்­பியே எப்­போ­தும் இருப்­போம். அத்துடன், கலை­ஞர் காலத்­தில் நிகழ்ந்­த­தைப்­போல, பாஜவு­டன் திமுக கூட்டு சேர வாய்ப்பில்லை என்ற அவர், வாஜ்­பாய் தலை­மை­யி­லான அன்­றைய பாஜவிற்­கும் இன்­றைய பாஜவிற்­கும் நிறைய வேறு­பாடு உள்­ளது. மேலும், அமைச்­ச­ராக தம் மகன் உத­ய­நி­தி­யின் செயல்­பா­டு­ பெரு­மைப்­ப­டத்­தக்க வகை­யில் இருக்கிறது.

உல­கெங்­கி­லும் உள்ள தமிழ்ப் படைப்­பா­ளி­களை அங்­கீ­க­ரித்து சிறப்­பிக்­கும் வகை­யில் தமிழ்­நாடு அரசு விரு­து­கள் வழங்க வாய்ப்­பு இருக்கிறதா? நல்ல யோசனை. உறு­தி­யா­கச் செய்­ய­லாம். அத்­து­டன், முந்தைய திமுக ஆட்­சி­யில் உல­கத் தமிழ்ச் செம்­மொழி மாநாடு நடத்தியது போல, இம்­மு­றை­யும் அதற்­கான திட்­டம் உண்டு. அதற்­கான சூழல் அமை­யும்­போது உரிய அறி­விப்பு வெளி­யா­கும்.

* உலகம் முழுவதும் பரவி வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு தாய்வீடு என்பது தமிழ்நாடு தான். உலகம் முழுக்க வாழும் தமிழர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் அமைப்பாக அந்த வாரியம்
அமைய வேண்டும் என திட்டமிட்டு செயல்படுத்துவோம்.

The post தமிழ்நாட்டில் விரைவில் உலக தமிழ் செம்மொழி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: