வீட்டில் ஊஞ்சல் விளையாடியபோது கழுத்தில் சேலை சுற்றி சிறுவன் பரிதாப சாவு

வேப்பூர்: வீட்டில் ஊஞ்சல் விளையாடிபோது கழுத்தில் சேலை சுற்றி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேப்பூர் அடுத்த மே.மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு புவனேஸ்வரி என்ற மகளும், சக்தி (10), ஹரிஷ் என்ற மகன்களும் உள்ளனர். வெங்கடேசன் குடும்பத்துடன் கோடை விடுமுறைக்காக சொந்த கிராமத்துக்கு குடும்பத்துடன் வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வெங்கடேசன், அவரது மனைவி சுமதி, புவனேஸ்வரி ஆகியோர் வெளியே சென்றுள்ளனர். சக்தி மட்டும் வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென அவரது கழுத்தில் சேலை சுற்றி இறுக்கி மூச்சுத்திணறி மயங்கி விழுந்துள்ளார். உடனே பாட்டி முருவாயி அருகிலிருந்தவர்கள் உதவியுடன் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்குபரிசோதித்த மருத்துவர்கள் சக்தி இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post வீட்டில் ஊஞ்சல் விளையாடியபோது கழுத்தில் சேலை சுற்றி சிறுவன் பரிதாப சாவு appeared first on Dinakaran.

Related Stories: