உதயநிதி ஸ்டாலின்: முத்தமிழ்ச்செல்வியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மேலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மற்றும் அரசு அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். முத்தமிழ்ச்செல்வி எவரெஸ்ட் சிகரத்தில் ஏற நிதிஉதவியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கி இருந்தார். மேலும் கூடுதல் நிதியுதவி வழங்குமாறு மீண்டும் கோரிக்கை விடுத்ததால் தன்னார்வல அமைப்புகள் மூலம் கூடுதலாக ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
The post எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த தமிழ்நாட்டை சேர்ந்த முத்தமிழ்ச்செல்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.