மும்பை: வர்த்தகம் தொடங்கியதிலிருந்து சரிவுடன் இருந்த பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் வர்த்தகநேர முடிவில் உயர்ந்து நிறைவுபெற்றது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டு 99 புள்ளி உயர்ந்து 61,873 புள்ளிகளானது. பார்த்தி ஏர்டெல் பங்கு 2.75%, ஐடிசி பங்கு 1.7%, கோட்டக் வங்கி பங்கு 1%, எல் அண்ட் டி பங்கு 0.99% விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டன.
பவர் கிரிட், பஜாஜ் பைனான்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், இன்போசிஸ், ஆக்சிஸ் வங்கி, எச்.சி.எல். பங்குகளும் விலை உயர்ந்தன. விப்ரோ, டாடா மோட்டார்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, சன் பார்மா, எச்.டி.எஃப்.சி., டாடா ஸ்டீல் பங்குகள் விலை குறைந்து கைமாறின. இதேபோன்று தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 36 புள்ளிகள் உயர்ந்து 18,321 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுபெற்றது.
The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 99 புள்ளி உயர்ந்து 61,873 புள்ளியில் வர்த்தகம் நிறைவு..!! appeared first on Dinakaran.