சீர்காழி சட்டநாதர் கோயில் குடமுழுக்குவிழாவுக்கு சென்ற ஆளுநர் ரவிக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ளச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்தியது தொடர்பாக 5 பேர் கைது, இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சீர்காழி சட்டநாதர் கோயிலில் மாலை நடைபெறும் யாகசாலை பூஜைகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொள்கிறார்.

The post சீர்காழி சட்டநாதர் கோயில் குடமுழுக்குவிழாவுக்கு சென்ற ஆளுநர் ரவிக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: