ரயில் சேவைக்கு ₹2,000 நோட்டு அனுமதி: ரயில்வே அறிவிப்பு

புதுடெல்லி: ரயில்வே டிக்கெட் முன்பதிவு, பார்சல் சேவை உள்ளிட்ட ரயில்வே சேவைகளுக்கு ரூ.2,000 நோட்டுகளைப் பயன்படுத்தலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி, வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை இன்று முதல் செப். 30ம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம். ரூ.2,000 நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றிக்கொள்ளலாம்.

இந்நிலையில் ரயில்வே போக்குவரத்து சேவைகளுக்கு 2,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் பயணம் மேற்கொள்ள ரயில்வே நிலையங்களில் கவுன்டர்களில் டிக்கெட் எடுப்பதற்கு, டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு, ரயில்வே உணவகங்கள், பார்சல் சர்வீஸ் உள்ளிட்ட சேவைககளுக்கும் ரூ.2,000 நோட்டுகளை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரயில் சேவைக்கு ₹2,000 நோட்டு அனுமதி: ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: