பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் சீர் கொண்டு சென்று பூப்பு நன்னீராட்டு விழாவை நடத்திய தாய்மாமன் மற்றும் மாமன்மார்களை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர். இது குறித்து அனன்யாவின் தாய்மாமன் தெரிவிக்கையில், முன்பெல்லாம் மாட்டு வண்டியில் தான் தாய்மாமன் சீர் கொண்டு செல்வார்கள், ஆனால் தற்போதைய தலைமுறையினருக்கு இதுவெல்லாம் தெரியாது. எனவே நமது பழைய பாரம்பரிய முறைகளை மீட்டெடுக்கும் வகையில் தற்போதைய சந்ததியினருக்கு கற்று கொடுப்பதற்காக இதுபோல் மாட்டு வண்டியில் சீர் கொண்டு வந்து விழா நடத்தியதாக தெரிவித்தார்.
The post அந்தியூர் அருகே தங்கை மகளின் பூப்பு நன்னீராட்டு விழாவிற்கு 16 மாட்டு வண்டியில் சீதனம் கொண்டு சென்ற தாய்மாமன் appeared first on Dinakaran.