மும்பை: தகவல் தொழில்நுட்பம், உலோகம், மருந்து நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியதால் சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 234 புள்ளிகள் உயர்ந்து 61,964 புள்ளிகளானது. 1,724 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்த நிலையில் 1,776 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து விற்பனையாயின. டெக் மகிந்திரா பங்கு 3%, விப்ரோ பங்கு 2.5% டிசிஎஸ், எச்சிஎல் டெக் பங்குகள் 2%, இன்போசிஸ் பங்கு 1.9% விலை உயர்ந்தது.
எல் அண்ட் டி, சன் ஃபார்மா, ஐடிசி பங்குகள் 1%, டைட்டன், மாருதி சுசூகி பங்குகள் 0.6% விலை உயர்ந்து வர்த்தகமாயின. நெஸ்லே இந்தியா, ஆக்சிஸ் வங்கி, பார்த்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ, எச்டிபிசி வங்கி பங்கு விலை குறைந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 111 புள்ளிகள் உயர்ந்து 18,314 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுபெற்றது.
The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 234 புள்ளிகள் உயர்ந்து 61,964 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!! appeared first on Dinakaran.