இதை பார்த்து சபலமடைந்த சுந்தர், குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்கள், குறிப்பிட்ட இடத்துக்கு அவரை வரச்சொல்லி உள்ளனர். இதை நம்பி சுந்தரும் அங்கு இளம்பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்க சென்றுள்ளார். அங்கு காத்திருந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல், சுந்தரை சுற்றி வளைத்து சரமாரி தாக்கி, அவர் அணிந்திருந்த தங்க செயின், 2 மோதிரம், செல்போன், பணம் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த சுந்தர் ரத்தம் சொட்டிய நிலையில் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்துக்கு நடந்து வந்து புகார் அளித்தார். போலீசார், அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் 3 மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்தனர். சிசிடிவி காமிரா பதிவுகள் மற்றும் மர்ம நபர்களின் செல்போன் டவரை வைத்து, நேற்று மாலை 3 பேர் கொண்ட மர்ம கும்பலை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை கூடுவாஞ்சேரி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் மதுரை, வண்டியூர் கிராமத்தை சேர்ந்த மாசாணிமுத்துவின் மகன் கார்த்திக் (25), டீச்சர் காலனி, தியாகராயநகரை சேர்ந்த பாலாஜி கண்ணனின் மகன் அஜித்குமார் (எ) ராகுல் (25), காமராஜர் சாலை, கிருஷ்ணா நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்த முருகானந்தனின் மகன் கிருபாசங்கர் (22) எனத் தெரியவந்தது. மேலும், இவர்கள் சுந்தரின் செல்போனுக்கு ஆபாச படங்களை அனுப்பி, இளம்பெண்களிடம் உல்லாசம் அனுபவிக்க வந்தவரை சரமாரி தாக்கி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, தனியார் நிறுவன மேலாளர் சுந்தரை தாக்கி பணம் பறித்த கார்த்திக், அஜித்குமார் (எ) ராகுல், கிருபாசங்கர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம், செல்போன், லேப்டாப், தங்க செயின் மற்றும் 2 மோதிரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post ஆபாச படங்களை அனுப்பி உல்லாசத்துக்கு அழைத்து தனியார் நிறுவன மேலாளரை தாக்கி பணம், நகை பறித்த 3 பேர் கைது: கூடுவாஞ்சேரி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.