போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலைச் சேர்ந்த தலைமறைவு குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது..!!

சென்னை: போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலைச் சேர்ந்த தலைமறைவு குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை வழியாக வந்தபோது சென்னை விமான நிலையத்தில் சிக்கினார். நெல்லையைச் சேர்ந்த காஜாமொய்தீன் (57) என்பவரை கைது செய்து குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கைதான காஜாமொய்தீன் மீது ஏற்கனவே 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலைச் சேர்ந்த தலைமறைவு குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: