சென்னையில் 20ம் தேதி மின்னணு சந்தைப்படுத்துதல் இணையவழி கருத்தரங்கம்: தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தகவல்

சென்னை: மின்னணு முறையில் சந்தைப்படுத்துதல் தொடர்பாக இணையவழி கருத்தரங்கம் வரும் 20 தேதி நடைபெறும் என தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக வரும் 20ம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்த இணையவழி கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

அதன்படி, இந்த பயிற்சியில் மின்னணு முறையின் நுட்பங்கள், இணையதளத்தை உருவாக்குதல், டொமைன் பெயர் உருவாக்குதல், ஹோஸ்டிங் மற்றும் இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் மற்றும் விதிகள், மின்னணு முறையில் சந்தைப்படுத்தலில் நன்மைகளை விளக்குதல் போன்றவை நடைபெறவுள்ளன. அந்தவகையில், இப்பயிற்சி பற்றி கூடுதலாக விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த பயிற்சியில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியமாகும். மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை- 600032. 7418304939. 9677152265, 8668102600. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post சென்னையில் 20ம் தேதி மின்னணு சந்தைப்படுத்துதல் இணையவழி கருத்தரங்கம்: தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: