என்னைப்போன்றவர்கள் அப்படி செய்தால் கட்சியில் ஒழுக்கம் இருக்காது. மேலிடம் முடிவெடுத்து பொறுப்பு வழங்கினால் ஏற்றுக்கொள்வேன். முடியாது என்று சொல்லமாட்டேன். நான் காங்கிரசுக்காக 8 ஆண்டுகள் தலைவராக இருந்து எவ்வளவோ பணியாற்றியுள்ளேன். 2013ம் ஆண்டு கட்சி ஆட்சியை பிடித்தது எனது தலைமையின் கீழ் தான். துணை முதல்வராகவும் இருந்துள்ளேன். இதனால் ஆட்சி நடத்தக்கூடிய திறமை எனக்கும் உள்ளது. ஆனால் இதற்காக லாபி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அமைதியாக இருக்கிறேன். அதனால் நான் திறமையற்றவன் என்று அர்த்தமில்லை. வாய்ப்பு கொடுத்தால் என்னுடைய திறமையை வெளிப்படுத்துவேன். அடுத்த முதல்வரை மேலிடம் முடிவெடுக்கும். மக்களிடம் நிறைய வாக்குறுதிகள் அளித்துள்ளோம். அதை நிறைவேற்ற வேண்டிய கடமை இருக்கிறது’ என்றார்.
The post என்னை முதல்வராக்கினால் ஆட்சி நடத்த நான் தயார்: முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர் அதிரடி appeared first on Dinakaran.