ஆதிதிராவிடர் நலத்துறையின் திட்ட பயன்கள் மக்களுக்கு விரைந்து கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவுரை

சென்னை: சென்னை, தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகள் மற்றும் அவற்றின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடந்தது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகள் குறித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் விரிவான ஆய்வு மேற்கொண்டார். மேலும், அரசாணை வெளிடப்பட்ட அறிவிப்புகளுக்கு முழு செயல் வடிவம் கொடுத்து இத்திட்டங்களின் பயன் மக்களை விரைந்து சென்றிடுவதை உறுதி செய்திடுமாறும், அரசாணை வெளியிடப்பட வேண்டிய அறிவிப்புகளுக்கு உரிய கருத்துருக்களை அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்குமாறும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

The post ஆதிதிராவிடர் நலத்துறையின் திட்ட பயன்கள் மக்களுக்கு விரைந்து கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: