இந்த ஆண்டுக்கான திருவிழா ஜூன் 2 மற்றும் 3ல் நடக்கிறது. இந்த திருவிழாவுக்கு பழக்க, வழக்க முறையை சிலர் மாற்ற முயல்கின்றனர். அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டுமென கூறுகின்றனர். இதனால் பொதுமக்களிடையே பிரச்னை ஏற்படுத்த முயல்கின்றனர். இதுதொடர்பான மற்றொரு வழக்கில் மூன்றாம் தரப்பினர் யாருக்கும் முதல் மரியாதை கொடுக்கக் கூடாது என ஐகோர்ட் கிளை ஏற்கனவே உத்தரவிட்டது. எனவே, கோயில் திருவிழாவில் மூன்றாம் தரப்பினர் யாருக்கும் சிறப்பு மரியாதை கொடுக்கவில்லை என்பதை உறுதி செய்யுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் பிறப்பித்த உத்தரவு: பக்தர்களும், பொதுமக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும். யாருக்கும் சிறப்பு மரியாதை கொடுக்கக் கூடாது, கோயில் மற்றும் கோயில் வளாகத்திற்குள் யாரும் கூட்டமாக செல்ல அனுமதிக்கக் கூடாது என்ற முந்தைய உத்தரவை சிவகங்கை ஆர்டிஓ உறுதி செய்ய வேண்டும். அனைத்து சமூகத்தினரையும் சமமாக நடத்துவதையும் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 12க்கு தள்ளி வைத்தார்.
The post அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்; கோயிலில் யாருக்கும் சிறப்பு மரியாதை கூடாது; ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.
