தற்பொழுது வரை காங்கிரஸ் முன்னிலையில் உள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பாஜக தலைவர் பிஎஸ் எடியூரப்பா பேசியதாவது; பாஜகவின் வெற்றிக்காக கடந்த 4 மாதங்களாக ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் உழைத்தேன், கர்நாடக மக்கள் அளித்துள்ள இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், பாஜகவுக்கு வெற்றி மற்றும் தோல்வி புதிதல்ல. இந்த முடிவுகளால் கட்சி தொண்டர்கள் பீதியடைய தேவையில்லை. கட்சியின் பின்னடைவு குறித்து நாங்கள் சுயபரிசோதனை செய்வோம் என்று பாஜக தலைவர் பிஎஸ் எடியூரப்பா கூறியுள்ளார்.
The post கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்: பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா பேட்டி appeared first on Dinakaran.