திண்டுக்கல்: பரப்பலாறு அணையிலிருந்து 15ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்திலுள்ள பெருமாள்குளம், முத்துபூபாலசமுத்திரம் கண்மாய், சடையகுளம், செங்குளம், இராமசமுத்திரக்கண்மாய் மற்றும் ஜவ்வாதுப்பட்டி பெரியகுளம் ஆகிய 6 குளங்களுக்கு, பாசன நிலங்கள் பயன்பெறும் பொருட்டு 15.05.2023 முதல் 27.05.2023 வரை 47.04 மில்லியன் கன அடிக்கு மிகாமல் பரப்பலாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்திலுள்ள தாசாரிபட்டி, விருப்பாட்சி, தங்கச்சியம்மாபட்டி, வக்கம்பட்டி, வெரியப்பூர் மற்றும் ஜவ்வாதுபட்டி கிராமங்களிலுள்ள 1323 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
The post பரப்பலாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.
