அரக்கோணம்: அரக்கோணத்தில் திருட்டு வழக்கில் கைதான தம்பதியினர் தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீடு புகுந்து ரூ.58,000 திருடிய தமிழ்ச்செல்வி, கணவன் சுகன் ஆகியோரை போலீசார் கைது செய்திருந்தனர். மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக இருவரையும் அழைத்து வந்த நிலையில் தப்பி ஓடினர்.