இந்த கூட்டத்துக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.சந்திரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் பூபதி முன்னிலை வகித்தார். திருத்தணி நகர செயலாளர் வினோத்குமார் வரவேற்று பேசினார். நகர நிர்வாகிகள் சங்கர், கணேசன், விஜயா கஜேந்திரன், சாமிராஜ், ஷியாம் சுந்தர், மோகன் ராவ், அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழக பேச்சாளர் சங்கை தாமஸ் கலந்துகொண்டு, திமுக அரசின் 2 ஆண்டு சாதனைகள் குறித்து பேசினார். இந்த கூட்டத்தில், நிர்வாகிகள் நாகன், நகர கவுன்சிலர்கள் லோகநாதன், பிரசாத், மகேஸ்வரி ரவிக்குமார், அப்துல்லா, ஜோதி நகர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்ட முடிவில் ரஹீம் நன்றி கூறினார்.
The post திருத்தணியில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் appeared first on Dinakaran.