அதேபோல் 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 35 சாலைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.28 கோடி மதிப்பீட்டில் 6 சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக 30வது வார்டு பிருந்தாவன் காலனி பகுதியில் தார்ச்சாலை பணிகளையும், 15வது வார்டு மருதம் தெருவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளையும் அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார். இந்நிலையில், அடிக்கல் நாட்ட வருகை தந்த அமைச்சர் நாசரை பொதுமக்கள் பூக்களை கொடுத்தும் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில், ஆவடி மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ், ஆவடி மாநகர பொறுப்பாளர் சன்பிரகாஷ், கிழக்குப் பகுதி செயலாளர் பேபி சேகர், பகுதி செயலாளர்கள் பொன் விஜயன், ஜி.ராஜேந்திரன், மண்டல குழு தலைவர் அமுதா பேபி சேகர், ஜோதிலட்சுமி, கு.சேகர், பொறியாளர் ரவிசந்திரன், மற்றும் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
The post ஆவடி மாநகராட்சியில் ரூ.9.5 கோடியில் நலத்திட்ட பணிகள்: அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.
