ஈஞ்சம்பாக்கம், கோவிந்தவாடி ஊராட்சிகளில் ரூ.33.50 லட்சத்தில் அங்கன்வாடி சமுதாய கூடம் கட்டும் பணி: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

வாலாஜாபாத்: ஈஞ்சம்பாக்கம் மற்றும் கோவிந்தவாடி ஆகிய ஊராட்சிகளில் ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம், சமுதாய நலக்கூடம் கட்டிடம் கட்டும் பணியை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் ஈஞ்சம்பாக்கம் மற்றும் கோவிந்தவாடி ஆகிய ஊராட்சிகளில் அங்கன்வாடி மையம் மற்றும் சமுதாய நலக்கூடம் கட்டிடம் தட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கோரிக்கை வைத்து வைத்தனர்.

இந்த கோரிக்கையின்படி, காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.33.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் ஈஞ்சம்பாக்கம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் மற்றும் கோவிந்தவாடி ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் ஆகிய கட்டிடங்கள் கட்டும் பணியை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றிய செயலாளர் பாபு, ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், திமுக ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஈஞ்சம்பாக்கம், கோவிந்தவாடி ஊராட்சிகளில் ரூ.33.50 லட்சத்தில் அங்கன்வாடி சமுதாய கூடம் கட்டும் பணி: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Related Stories: