இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து அதிகளவு கரும்புகை வெளியானது. சிறிது நேரத்தில் அலுவலகம் முழுவதிலும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. இதனால் அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். தகவலறிந்த செங்குன்றம் போலீசாரும், அம்பத்தூர், செங்குன்றம், மாதவரம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி, அலுவலகத்தில் பற்றியெரிந்த தீயை அணைத்தனர். எனினும் அலுவலகத்தில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான டிவி, கம்ப்யூட்டர், பிரிண்டர், ஏசி உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இந்த அலுவலகத்துக்கு அருகே நின்றிருந்த 3 சொகுசு பேருந்துகளில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் அவை தீ விபத்தில் சிக்காமல் தப்பியது.
இப்புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், டிராவல்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததாக தெரியவந்தது. எனினும், தொழில் போட்டி காரணமாக யாரேனும் அலுவலகத்தில் தீ வைத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
The post செங்குன்றத்தில் பரபரப்பு: தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் தீ விபத்து appeared first on Dinakaran.