தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பம் இன்று முதல் விநியோகம்

சென்னை: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3ம் தேதி முடிவடைந்தது. இதற்காக முடிவுகள் வரும் மே 8ம் தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 633 சுயநிதி தனியார் மற்றும் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த நிலையில், வரும் கல்வியாண்டிற்கான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது. சுயநிதி கல்லூரிகளில் நாளையும், அரசு கல்லூரிகளில் மே 9ம் தேதி முதலும் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.

மே 8ம் தேதி முடிவுகள் வெளியான பின்னர், மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தனியார் கல்லூரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு கல்லூரிகளை பொறுத்தவரை முடிவுகள் வெளியான பின்னர், மே 9ம் தேதியில் இருந்து ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம் என்று உயர்கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் மே 9ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் துவங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

The post தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பம் இன்று முதல் விநியோகம் appeared first on Dinakaran.

Related Stories: