நீரில் மூழ்கி பலியான 4 மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதி:முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: சேலம் மாவட்டம், சேலம் வட்டம், கன்னங்குறிச்சி தாமரைநகர் என்ற இடத்தில் உள்ள புது ஏரியில் கடந்த 22ம் தேதி நண்பகல் குளிக்க சென்ற கன்னங்குறிச்சி கிராமம், கோவிந்தசாமி காலனியை சேர்ந்த பிரசாந்த் (17) மற்றும் பாலாஜி (16) ஆகிய இரண்டு மாணவர்களும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினை கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.இதேபோல், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், வி.குமாரமங்கலம் கிராமம் பெரியகாலனியை சேர்ந்த தினேஷ் (14) மற்றும் இன்பரசன் (8) ஆகிய இருவரும் கடந்த 23ம் தேதி காலை அதே கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினையும் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post நீரில் மூழ்கி பலியான 4 மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதி:முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: