பட்டாசு ஆலை வெடித்து விபத்து பெண் சாவு

ஏழாயிரம்பண்ணை: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையை சேர்ந்தவர் கேசவன்(50). இவருக்கு மார்க்கநாதபுரத்தில் சொந்தமாக பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் பட்டாசு ஆலையில் மூலப்பொருட்கள் வைத்திருக்கும் அறையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு, பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில், மார்க்கநாதபுரத்தை சேர்ந்த ஜெயசித்ரா(24) என்ற இளம்பெண் உடல் கருகி பலியானார். உயிரிழந்த பெண்ணுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

The post பட்டாசு ஆலை வெடித்து விபத்து பெண் சாவு appeared first on Dinakaran.

Related Stories: